சனி, 13 டிசம்பர், 2008

வியர்வை : அறிவியல் விளக்கம்

நமது உடல் முழுவதும் 20 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன, இவை யாவும் நமது தோலின் அடி பாகத்தில் திசுக்களின் உள்ளே இருக்கின்றன. நமது உள்ளங்கைகள், உள்ளங்கால்களில் ஒரு சதுரசெண்டிமீட்டருக்கு 400 - 500 சுரப்பிகள் உள்ளதால் அங்கு வியர்வை சிறிது அதிகமாக உண்டாகிறது.

நமது உடல் ஒரு உலை போல, 24 மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருப்பதால் உடலில் ஏராளமானவெப்பமும் கூடவே கழிவு பொருட்களும் உண்டாகின்றன, இந்த கழிவு பொருட்களை வெளியேற்றவும்உடலை குளிர்ச்சியாக வைத்ததுக்கொள்ளவும் வியர்வை சுரப்பிகள் இடைவிடாது இயங்கி வியர்வையை வெளியேற்றுகின்றன.

வியர்வையில் 90% தண்ணீர், 5% உப்பு, 2.5% யூரிக் ஆஸிட், 2.5% ஹிப்யூரிக் ஆஸிட் ஆகியவை உள்ளன. மற்றும் உடலானது மிகவும் அதிகமாக வியர்த்தால் அது நல்லதல்ல, உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

வெள்ளி, 5 டிசம்பர், 2008

இந்திரா சௌந்தரராஜனின் - தினம் ஒரு உயிர்

சென்ற வாரம் நான் சென்னையிலிருந்து மும்பை செல்வதற்காக எக்மோர் வந்திருந்தேன், தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சில எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிகள் எக்மொரீலிருந்து புறப்படுகின்றன. நான் டைம் பாஸ்காக சில புத்தகங்கள் வாங்கினேன், அதில் ஒன்றுதான் " இந்திர சௌந்தர்ராஜனின் - தினம் ஒரு உயிர் ".

சாதாரணமாக டைம் பாஸ்-கு படிக்க ஆரம்பித்தவன் அந்த புத்தகம் முடியும் வரை கீழே வைக்கவில்லை, அத்தனை விறுவிறுப்பு. சினிமா ஷூட்டிங் லொகஷன் பார்ப்பதற்காக செல்லும் ஒரு சினிமா இயக்குநரின் அமானுஷ்ய அனுபவங்கள்தான் கதை..

மொத்தம் 4 பாகங்கள், நான் இரண்டு மட்டுமே வாங்கினேன், மத்த 2 பாகங்களையும் இனிமேல்தான் வாங்கவேண்டும்.உங்களுக்கும் கிடைத்தால் வாங்கி சுவையுங்கள்.